உங்கள் கருத்துகள்

இந்த வலையதளத்தில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.பிறர் மனதை புண்படுத்தும் நோக்கில் இருக்க கூடாது நிபந்தனைக்கு உட்பட்டது.

என்னைப்பற்றி

Friday, 21 February 2014

உறங்கிய ஜீவன்

விழியோரம் வழியும் 
துளிநீரும் சொல்கிறது 
என் சோகம் என்னவென்று,

என் கண்ணீர் துளிகளை 
அணைகட்டி அதில் துள்ளி 
குதித்து நீராடுகிறாய் -என் 
சோகம் என்னவென்று தெரியாமல்,

நான் காற்றாக வர ஆசைதான் 
உன் சுவாச மூச்சாக 
இருப்பேன் என்பதற்காக,

காதல் என்னும் கல்வெட்டில் 
உன் நினைவால் இன்று -என்பெயரும் 
பொறிக்கப்பட்டுள்ளது,

பெண்ணே! நேசிக்க நேரம் கிடைத்த 
உனக்கு சிறிது யோசிக்க நேரம் 
இல்லாமல் போனதோ!

உனக்காக உயிரையும் கொடுப்பேன் 
என்பதற்காக- என் உயிரையும் எடுத்துவிட்டாய் 
உன் பொய்யான காதலை சொல்லி,

அடுத்த பிறவி இருந்தால் 
தினம்தினம் வீர மரணம் அடையவேண்டும் 
உன் விரல் நிகமக பிறந்து 
உன் இதழ்களில் சிக்கி ....

காதல் கைதியாய் என்னை சிறைபிடித்து
அதில் ஆயுள் கைதியாய் என்னை 
இட்டு வைத்தாய் ,

நான் இறந்து விட்டேன் 
என்று தெரியுமோ? 

இன்று என் கல்லறையில் 
பூக்கப்பட்ட பூக்களாய் 
பிறந்துள்ளேன்,

இன்று உன்தோலில் கிடக்கிறேன் 
மணமாலையாய் .....

நீ ஆனந்தத்தில் சிந்தும் 
கண்ணீர் துளிகள் கூட 
என்மீது விழுகிறது ,

ஒவ்வொரு துளியும் சொல்கிறது 
எனது ஏமாற்றத்தை......

என் ஜீவன் கேட்கிறது 
எனக்காக ஒருதுளி கண்ணீர் 
சிந்து என் ஆன்மா சாந்தி அடையும்,

என்னையும் மறந்து இன்னும் 
உறங்குகிறேன் உன் நினைவோடு 
அந்த கல்லறையில்...


உறங்கிய ஜீவன்....

என்றும் அன்புடன் 
சேர்ந்தை பாபு .த

No comments: