உங்கள் கருத்துகள்

இந்த வலையதளத்தில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.பிறர் மனதை புண்படுத்தும் நோக்கில் இருக்க கூடாது நிபந்தனைக்கு உட்பட்டது.

என்னைப்பற்றி

Friday, 21 February 2014

வெற்றியின் இரகசியம்

வெட்டப்பட்ட மரம் கூட 
இன்றும் தழைக்கிறது,

தோழா! 

நீ தோற்றுவிட்டாய் என்று 
எண்ணி ஏன் முயற்சிக்க மறுக்கிறாய்,

காயப்பட்டவனுக்கு மட்டுமே 
அதன் வலிதெரியும்,

நீ அந்தக் காயமாக இல்லாமல் 
அதற்க்கு மருந்தாக இரு,

உன்னைத் தூக்கி எறிந்துவிட்டார்கள் 
என்று நினைக்காதே!

உன் கைவிலங்கினை உடைத்து 
உன்னைச் சுதந்திரப்பறவையாக 
பறக்கவிட்டார்கள் என்று எண்ணிக்கொள்!

நீ எதையும் தூரம் என்று நினைக்காதே 
அவ்வாருநினைத்தால் உன் அருகில் 
இருப்பவைகூட  தூரம்தான்,

இருபக்கம் இருந்தால்தான் 
நாணையத்திற்கு மதிப்பு -அதுபோல் 

நீ கோழையாய் 
ஒருபக்க நாணையமாய்
இல்லாமல் வீரனாய் 
இருபக்க நாணையமாய் மாறு,

ஓயாமல் (அயராது) முயர்ச்சிப்பவனுக்கு 
மட்டுமே வெற்றி கிட்டும் .........

==========================================
பிழை இருந்தாலும் தவறுகள் இருந்தாலும் 
உங்கள் கருத்துக்களை தயங்காமல் தெரிவிக்கவும் 
அடியேன் அதை திருத்திக்கொள்கிறேன்.
==========================================
என்றும் அன்புடன் 
சேர்ந்தைபாபு.த

No comments: