மாதர் தம் மடியில்
மழலை தவள ஆசை,
கழனியில் ஏர் உளும்
உழவனுக்கோ சிந்திய
வேர்வை துளிகள்
நென்மணியாய் வர தவிப்பு,
மைக்கோல் சிந்திய
எழுத்துக்கள்
நூலாய் வர எழுத்தாளன்
தவிப்பு,
தேர்வின் முடிவிற்கு
மனமுவந்த மாணவனின்
தவிப்பு,
கருவறை விட்டு
பிரிந்த கண்மணியை
காண தவிப்பு,
காதலியே!
உன்னை விட்டு
பிரிந்த நான் மட்டும்
காலம் எல்லாம் தவிப்பு,
ஏங்கி தவிக்கும்
உள்ளத்திற்கு
ஏமாற்றம் தான் பரிசு
என்றால்
எழுதி விடுங்கள்
வாழ்க்கையில் ஏங்கி
தவித்தவர்கள்
இமயம் தொட்டார்கள்
என்று,
நாளை எழுதுவோம்
சரித்திரத்திற்கு
தவிப்பும் ஒரு
காரணம் என்று.
என்றும் அன்புடன்
சேர்ந்தை_பாபு.த

No comments:
Post a Comment