உங்கள் கருத்துகள்

இந்த வலையதளத்தில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.பிறர் மனதை புண்படுத்தும் நோக்கில் இருக்க கூடாது நிபந்தனைக்கு உட்பட்டது.

என்னைப்பற்றி

Friday, 18 October 2013

"பாட்டி"




ஈன்றெடுத்த
அன்னையாய்
என் தந்தைக்கு
தாயாய் நீ

என் அன்னைக்கு
அத்தையை நீ
எனக்கோ பாட்டியை நீ (அப்பத்தா),

கூன் விழுந்தும்
குமரியாய் நீ

நீ குத்தும் உலக்கை சத்தம்
குமரியும் நடுநடுங்க

ஏதோ! தேடுகிறாய்
மூன்று காலில்
ஒருகாலை காணலையே,

பேராண்டி இங்க வாபனு (தளர்ந்த குரலுடன்)
பாட்டியோட கம்ப (கொம்பு) பாருப்பானு

உன் அனுபவத்தின் வயதை
ஆயுளில் கழித்தவள் நீ,

தலைமுறை தழைக்க
தன்னை உரமாய் இந்த
பூமிக்கு இட்டவள் நீ 

கதை கேட்டு உணவு உன்ன
உன் மடியில் நான் தூங்க
ஆசைகள் நூறு,

ஆனால் இன்று நீ இல்லை
உன் நினைவுகள் மட்டும்
என்னுள் தீர வண்ணம்
புதைந்து கிடக்கிறது,

என்று உன் நினைவுடன்
உன் பேரன்

சேர்ந்தை_பாபு,

No comments: