தாயே!
நான் என்ன பவம்
செய்தேன்,
தவறு செய்தவள் நீ
தண்டனையோ எனக்கு,
இருள் சூழ்ந்த
கருவரெயில் நான்
விலை மாதுவாய்
கட்டிலில் நீ
நான் கண் திறக்க
அசை படுகிறேன்
நீயோ காசுக்கு
ஆசைப்படுகிறாய்
மாதங்கள் மூன்று
ஆனதுமே நீ
முடிவெடுத்தாய்
உன் கருவறையிலேயே
எனக்கு கல்லறை எழுப்ப
தாயே! தயங்காதே
எனது முடிவில் தான்
மீண்டும் உனது தொடக்கம்
நான் சிந்தும் ஒருதுளி
கண்ணீரைக் கூட இந்த
உலகம் காணாது
நான் உள்ளுக்குள் அல்லவா
அழுதுகொண்டுஇருக்கிறேன்?
உறங்கிய படி
உன் கருவறையில்
கல்லறை தேடும்
குழந்தையாய் நான்.
தொடக்கம் இல்லாத முடிவுடன்
சேர்ந்தை_பாபு.த
சேர்ந்தை_பாபு.த

No comments:
Post a Comment