இலையில் தவழும் பனித்துளியாய் என்
இமையில் தவழ்கிறது என்
கண்ணீர் துளிகள்,
வெள்ளம் பெருக்கெடுத்து
உடையும் கம்மாய் போல்
சோகத்தில் என் விழிக்கிடங்கில்
பெருக்கெடுத்து ஓடுகிறது,
என் துன்பத்தின் வெளிப்பாட்டாய்
என் கண்ணீர்த்துளி சோகமாய்
என் சந்தோசத்தின் வெளிப்பாட்டாய்
என் கண்ணீர்த்துளி ஆனந்தமாய்
அடடா!
ருசி இல்லாத இவன் வாழ்கையில்
கரிப்பு ருசி தந்தாய்
என் இதழோரம்,

No comments:
Post a Comment