"முடிவில்லாத நாளை"
எல்லை இல்லா வானம் கூட உன் வசம்
நீ உன்னை அறியும் போது
நீ தேடி பார்க்கும் போது கிடைப்பதில்லை
உனது வெற்றிகள்,
நீ தொலைக்கபட்ட இடத்தில் தேடு
உன் நிம்மதியை,
நீ கடக்கப்பட்ட கற்கள் கூட உன் பின்னால்
மைல் கல்லாய் நிற்கிறது,
நீ கடந்து சென்ற காலங்களில்
என்ன செய்தாய்,
நீ தொலை வானத்தை தோழன் என்று என்னி
நீ தொட துணிந்தால் அது தூரம்தான்,
நாளை என்பது முடிவில்லை என்பதை
நீ அறிந்தால் உன் கடமையை
நீ இன்றே செய்து முடிப்பாய்,
என்றும் அன்புடன்
சே.பா

No comments:
Post a Comment