கல்வி
உயர்ந்த சிந்தனைகள்
உன்னை நல்வழியில்
நடத்திச்செல்லும்,
நீ கற்ற கல்வி
இந்த உலகம் அழியும்
வரை அழியாது,
மற்றவர்களின்
உணர்வுகளை மதித்தால் தான்
நீ மனிதன்,
உறங்கும் முன் நீ
ஒருவரி எழுது, நீ உறங்கிய பின்
விழிப்பாய் என்பது
சாத்தியம் அல்ல,
நீ எழுதிய வரிகள்தான்
நாளைய சரித்திர வரலாறு
என்பதை மறந்து விடாதே!
நீ உன் நம்பிக்கையை
இழக்கும் போது துரும்பு கூட
தூணாகும்,
காற்று புகாத இடத்திலும்
நீ கற்ற கல்வி புகுந்துவிடும்
அந்த விண்ணிலும் கூட.
நினைப்பதை நேர்த்தியுடம்
செய்தால் உன் நிகழ்காலம்
சொர்க்கம் ஆகும்,
மறு பிறவி எடுப்போம்
என்று இந்த மானிட பிறவியை
தொலைத்து விடாதே!
என்றும் அன்புடன்
.......சே.பா........

No comments:
Post a Comment