உங்கள் கருத்துகள்

இந்த வலையதளத்தில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.பிறர் மனதை புண்படுத்தும் நோக்கில் இருக்க கூடாது நிபந்தனைக்கு உட்பட்டது.

என்னைப்பற்றி

Friday, 24 January 2014

மழை


மழை பெய்யும் நேரம்
இடி மேளதாளம் போடும்,
சாரல் வீசும் நேரம் 
என் வீட்டு சன்னல் ஓரம் நானும்,

மேற்கூரை மழைநீர் வடிகிறதே 
கைநீட்ட நீரோ சிதர்கிறதோ!
துளிநீரில் பள்ளம் நிறைய 
அதில்  துள்ளி நானும் குதிக்க,

மொட்டை மாடியில்!
உலர்ந்த துணியும் நனைகிறதே,
சட்டை பையிலும்
குறிப்பேடும் கசங்கிதான் போனதே!

ஆசைகள் நூறு (முற்றத்தில்)
மழைநீரை பாரு
அதில் துள்ளி குதிக்கும் போது
என் ஆயிலும் நூறு!

பொக்கிஷம் இந்த பூமி 
இதில் என்ன குறை நீ காமி
பொய்த்து விட்ட மேகம் (இதற்க்கு) 
காரணம் நீதான் பாவம் 

என்றும் அன்புடன்
         சே.பா

No comments: